சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.015
திருநாவுக்கரசர்
தேவாரம்
பற்று அற்றார் சேர் பழம் பண் - பழம்பஞ்சுரம் (பாவநாசத் திருப்பதிகம் ) Audio: https://www.youtube.com/watch?v=eUlIEsCnKo4 Audio: https://sivaya.org/audio/4.015 Patru Atrraar.mp3 Audio: https://sivaya.org/audio/4.015 - பற்று அற்றார் சேர்.mp3 |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.015  
பற்று அற்றார் சேர் பழம்
பண் - பழம்பஞ்சுரம் (திருத்தலம் பாவநாசத் திருப்பதிகம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சேத்திரக்கோவை
பற்று அற்றார் சேர்| பழம் பதியை,| பாசூர் நிலாய| பவளத்தை, சிற்றம்பலத்து எம் |திகழ்கனியை,| தீண்டற்கு அரிய |திரு உருவை, வெற்றியூரில்| விரிசுடரை,| விமலர்கோனை, |திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் | உத்தமனை,| உள்ளத்துள்ளே | வைத்தேனே. | [1] |
ஆனைக்காவில் அணங்கினை, ஆரூர் நிலாய அம்மானை, கானப் பேரூர்க் கட்டியை, கானூர் முளைத்த கரும்பினை, வானப் பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை, மானக் கயிலை மழகளிற்றை, மதியை, சுடரை, மறவேனே. | [2] |
மதி அம் கண்ணி நாயிற்றை, மயக்கம் தீர்க்கும் மருந்தினை, அதிகைமூதூர் அரசினை, ஐயாறு அமர்ந்த ஐயனை, விதியை, புகழை, வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை, நெதியை, ஞானக் கொழுந்தினை, நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே. | [3] |
புறம் பயத்து எம் முத்தினை, புகலூர் இலங்கு பொன்னினை, உறந்தை ஓங்கு சிராப் பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை, கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை, அறம் சூழ் அதிகை வீரட்டத்து அரிமான் ஏற்றை, அடைந்தேனே. | [4] |
கோலக் காவில் குருமணியை, குடமூக்கு உறையும் விடம் உணியை, ஆலங்காட்டில் அம் தேனை, அமரர் சென்னி ஆய்மலரை, பாலில்-திகழும் பைங்கனியை, பராய்த்துறை எம் பசும் பொன்னை, சூலத்தானை, துணை இலியை, தோளைக் குளிரத் தொழுதேனே. | [5] |
மருகல் உறை மாணிக்கத்தை, வலஞ்சுழி(ய்)யின் மாலையை, கருகாவூரில் கற்பகத்தை, காண்டற்கு அரிய கதிர் ஒளியை, பெருவேளூர் எம் பிறப்பு இலியை, பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை, சிந்தையுள்ளே வைத்தேனே. | [6] |
எழில் ஆர் இராச சிங்கத்தை, இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை, குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை, நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை, அழல் ஆர் வண்ணத்து அம்மானை, அன்பில் அணைத்து வைத்தேனே. | [7] |
மாலைத் தோன்றும் வளர்மதியை, மறைக்காட்டு உறையும் மணாளனை, ஆலைக் கரும்பின் இன்சாற்றை, அண்ணாமலை எம் அண்ணலை, சோலைத் துருத்தி நகர் மேய சுடரில்-திகழும் துளக்கு இலியை, மேலை வானோர் பெருமானை, விருப்பால் விழுங்கியிட்டேனே. | [8] |
சோற்றுத்துறை எம் சோதியை, துருத்தி மேய தூமணியை, ஆற்றில் பழனத்து அம்மானை, ஆலவாய் எம் அருமணியை, நீரில் பொலிந்த நிமிர் திண்தோள் நெய்த்தானத்து எம் நிலாச்சுடரைத் தோற்றக் கடலை, அடல் ஏற்றை, தோளைக் குளிரத் தொழுதேனே. | [9] |
புத்தூர் உறையும் புனிதனை, பூவணத்து எம் போர் ஏற்றை, வித்து ஆய் மிழலை முளைத்தானை, வேள்விக் குடி எம் வேதியனை, பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை, பொதியில் மேய புராணனை, வைத்தேன், என் தன் மனத்துள்ளே-மாத்தூர் மேய மருந்தையே. | [10] |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள் ஏறு ஊர்ந்தானை, அந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானை, சிந்தை வெள்ளப் புனல் ஆட்டிச் செஞ்சொல் மாலை அடிச் சேர்த்தி, எந்தை பெம்மான், என் எம்மான் என்பார் பாவம் நாசமே. | [11] |